Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

India alleges – Bangladesh’s Intelligence Service is using ULFA to train Anti-Indian Insurgents

பதிந்தவர் SnapJudge மேல் ஜனவரி 14, 2007

உல்பா தலைவர்களுக்கு பங்களாதேஷ் அடைக்கலம் வழங்குவதாகக் குற்றச்சாட்டு

உல்பா தீவிரவாதிகள்
உல்பா தீவிரவாதிகள்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும்
உல்பா உள்ளிட்ட பல்வேறு பிரிவினைவாதக் குழுக்களின் தலைவர்களுக்கு, அண்டை நாடான பங்களாதேஷில் அடைக்கலம் கொடுக்கப்பட்டிருப்பதாக, வடகிழக்கு மாநிலங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் இந்திய எல்லைப்
பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜோதி பிரகாஷ் சின்ஹா, செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் தேர்தல் முடியும் வரை வெளியில் நடமாட வேண்டாம் என அடைக்கலம் தருவோரால் அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு சக்திகளின் அறிவுரையின்படி, பயங்கரவாதக் குழுக்களின் தலைவர்கள் பங்களாதேஷில் பாதுகாப்பாகத் தங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>