Na Muthukumar pens the opening song for Rajinikanth in Sivaji (The Boss)
பதிந்தவர் SnapJudge மேல் ஜனவரி 10, 2007
கவிஞருக்கு வசன “கிரீடம்’!
அஜீத் நடிக்கும் “கிரீடம்’ படத்தின் மூலம் வசனகர்த்தா ஆகியுள்ளார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். இயக்குநர் ஆகும் ஆசையில் பாலுமகேந்திராவிடம் நான்கு வருடங்கள் உதவியாளராகப் பணியாற்றியவர். இவருடைய பாடல்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கவே பாடலாசிரியராக நிலைத்துவிட்டார். சமீபத்தில் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்ற முத்துக்குமார், கடந்த வருடம் அதிக பாடல்கள் எழுதிய சினிமா பாடலாசிரியர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
அவர் பணியாற்றிய 34 படங்களில் 96 பாடல்கள் எழுதியிருக்கிறார். இவற்றில் 14 படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். தற்போது
- “சிவாஜி’,
- “போக்கிரி’,
- “பீமா’,
- “தீபாவளி’,
- “தமிழ் எம்.ஏ.’ உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார். இவற்றுள் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அடுத்த வருடம் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கப்போகும் ஒரு முக்கியப் பாடலும் அடக்கம். அது “சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்தின் அறிமுகப் பாடல்!
இந்த இடுகை இடப்பட்ட நாள் ஜனவரி 10, 2007 இல் 11:56 பிற்பகல் பின்வருமாறு பகுக்கப்பட்டுள்ளது AR Rehman, Ajeeth, Ajith, Ajith Kumar, Assistant Director, Author, Balu Mahendira, Balu mahendra, Beema, Doctorate, Na Muthukumar, Naa Muthukumar, Ph.d, Poet, Pokkiri, Rajini, Rajni, Singer, Sivaji, Sivaji the Boss, Song writer, Ultimate Star, Vijay, Writer, YSR, Yuvan, Yuvan Shankar Raja. You can follow any responses to this entry through the RSS 2.0 ஒடை. உங்களால் முடியும் பதிலிட்டுவிட்டுச் செல்லவும், அல்லது பின்னறியும் தடம் உங்களின் சொந்த தளத்திலிருந்து....

shibly சொன்னார்
i like ur in4mations very much.keep it
shibly சொன்னார்
let me know that what r the books has been released by na.muthukumar and how can i get it?(still i am searching in srilanka bookshops)