Bharathi Puthakalayam to publish Children Books in Chennai Book Exhibition
பதிந்தவர் SnapJudge மேல் ஜனவரி 10, 2007
புத்தக திருவிழாவில் புதிய முயற்சி
சென்னை, ஜன. 11:சென்னையில் துவங்கியுள்ள புத்தக திருவிழாவில் வியாழக்கிழமை முதல் நிறைவு நாள்வரை தினம் ஒரு தலைப்பில் புத்தகம் பேசுது இதழை பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது.
இதுகுறித்து பாரதி புத்தகாலயத்தின் பொது மேலாளர் நாகராஜன் கூறியது:
குழந்தைகளுக்கான நூல்கள் தமிழில் அதிகமாக இல்லை என்ற குறை இருந்தது. இதைப் போக்கும் வகையில் 2006 ம் ஆண்டு குழந்தைகளுக்கான 60 நூல்களை பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிட்டோம்.
புதன்கிழமை துவங்கும் சென்னை புத்தக திருவிழாவில் முதல் நாளில் இருந்து நிறைவுநாள் வரை தினம் ஒரு புத்தகம் பேசுது இதழ் வெளியிடுகிறோம். இந்திய இலக்கிய வரலாறு, கலை பண்பாடு, கவிதைகள் என பத்து தலைப்புகளில் பத்து ஆசிரியர்கள் இந்த இதழ்களை தயாரித்துள்ளனர். புத்தக ஆர்வலர்களுக்கு இந்த இதழ்கள் உதவியாக இருக்கும் என்றார்.
