Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Satyendra Dubey Murder Accused Recaptured in Gaya

பதிந்தவர் SnapJudge மேல் ஜனவரி 5, 2007

இந்தியாவில் ஊழலை வெளிப்படுத்தியவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கொலையான பொறியாளர் சத்தியேந்திர தூபே
கொலையான பொறியாளர் சத்தியேந்திர தூபே

இந்தியாவின் வடமாநிலமான பீகாரில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு ஒரு பெரிய அளவிலான நிர்மாணப் பணியில் ஊழல் இடம்பெற்றதை வெளிபடுத்திய பொறியாளர் சத்தியேந்திர தூபே கொல்லப்பட்டது தொடர்பாக முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக அந்த மாநிலப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய அந்த நபரான உதய்குமாரை தனது சொந்த ஊரான கயாவில் மீண்டும் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் மாநிலத் தலைநகரான பாட்னாவில் உள்ள ஒரு உள்ளூர் நீதிமன்றத்தின் போலீஸ் காவலில் இருந்த போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

அந்தப் பொறியாளர், நான்கு இளைஞர்களால் ஒரு சிறிய அளவிலான திருட்டு தொடர்பான சம்பவத்தில் கொல்லப்பட்டதாக இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை கூறுகிறது, ஆனால் இந்த மரணம் ஒரு திட்டமிட்ட ஒரு பெரிய சதியின் ஒரு பகுதி என தூபேயில் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>