Gaza Gunmen Kill 3 Sons of Palestinian Fatah Official
பதிந்தவர் SnapJudge மேல் டிசம்பர் 11, 2006
பாலஸ்தீன அதிகாரியின் மூன்று சிறுவயது மகன்மார் கொலை
பாலஸ்தீன பாதுகாப்புத்துறை அதிகாரியின் மூன்று சிறுவயது மகன்மார் காசாவில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பத்து வயதுக்கும் குறைவான இந்த மூன்று சிறுவர்களும், தமது தந்தையின் காரில் பள்ளிக்கூடத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, மற்றுமொரு வாகனத்தில் வந்தவர்கள், அந்த வாகனத்தின் மீது பல தடவைகள் சுட்டுள்ளனர்.
அந்த வாகனத்தின் ஓட்டுனரும் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை. பாலஸ்தீனக் குழுக்களான பத்தா மற்றும் ஹமாஸ் ஆகியவற்றுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
பாலஸ்தீன அரசாங்கத்துக்கு தற்போது தலைமையேற்றிருக்கும் ஹமாஸ் அமைப்பு இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது.
அதேவேளை, பாலஸ்தீன அதிபர் மஹமுத் அப்பாஸின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான, பத்தா அமைப்பைச் சேர்ந்த, சாஹிப் எரகத் அவர்கள், இந்த சிறுவர்களின் மரணம், பாலஸ்தீனர்களிடையே பெரும் ஆபத்தான, உள்மோதலுக்கு வழிவகுக்கலாம் என்று கூறியுள்ளார்.
