Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Infant Dead in Police Station – West Bengal Government questioned by Human Rights organization

பதிந்தவர் SnapJudge மேல் டிசம்பர் 9, 2006

பச்சிளம் குழந்தை சாவு: மேற்கு வங்க அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

புதுதில்லி, டிச. 10: மேற்கு வங்க மாநிலம், ஹெளரா போலீஸ் நிலையத்தில் தாயிடம் விசாரணை நடத்தியபோது குழந்தை இறந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில அரசை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி ஹெளரா போலீஸ் நிலைய போலீஸôர் அந்த தாயிடம் விசாரணை நடத்தியபோது குழந்தை அழுதது. ஆனால் போலீஸôர் அந்தக் குழந்தைக்கு பால் கொடுக்க விடாமல் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினராம். இதனால் குழந்தை இறந்தது.

இது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதையடுத்து இதுபற்றி இரண்டு வாரங்களுக்குள் பதில் அனுப்புமாறு மாநில தலைமைச் செயலர், போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>