India’s Rice production hampered by Global Warming
பதிந்தவர் SnapJudge மேல் டிசம்பர் 5, 2006
சீதோஷணநிலை காரணமாக இந்தியாவில் நெல் உற்பத்தி பாதிப்பு
![]() |
|
| தஞ்சையில் உள்ள ஒரு நெல் வயல் |
கரும்புகை போன்ற மாசு ஏற்படுத்தும் வாயுக்கள் மற்றும் புவி வெப்பமடைவதற்கு காரணமாக இருக்கும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் ஆகியவைகள் சீதோஷ்ணநிலை மீது ஏற்படுத்திய தாக்கம் மட்டும் இல்லாதிருந்தால், 1990களில் இந்தியாவின் நெல் உற்பத்தி, இன்னும் 25 சதவீதம் வரை அதிகமாக இருந்திருக்கும் என்று அமெரிக்க அறிவியல் சஞ்சிகை ஒன்றில் பிரசுரமான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
தெற்காசியாவெங்கும் காணப்படும், பழுப்பு நிற மேகங்கள் சூரிய வெளிச்சத்தையும் மழைபொழிவையும் குறைத்ததன் மூலம், அரிசி உற்பத்திமீது எதிர்மறையான தாக்கத்தை விளைவித்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சீனா மற்றும் இந்தோனேசியா போன்ற சுற்றுப்புற சூழல் மாசுபட்டுள்ள பிற நாடுகளிலும், இதே போன்ற ஆய்வை மேற்கொள்ள இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

