Manipur capital Imphal shutsdown, as PM arrives
பதிந்தவர் SnapJudge மேல் டிசம்பர் 3, 2006
மன்மோகன்சிங் வருகையை கண்டித்து மணிப்பூரில் முழு அடைப்பு
இம்பால், டிச.3- பிரதமர் மன்மோகன்சிங், மணிப்பூர் மாநிலத்தில் நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அவருடைய வருகையை ஒட்டி, இரு அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
`திபாய்முக்’ அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழு சார்பிலும், மணிப்பூரில் பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்களுக்கு ஊக்கம் அளிக்கும் ஆயுத சட்டம் அமலில் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, புரட்சிகர மக்கள் முன்னணி என்ற தீவிரவாத அமைப்பு சார்பிலும் இந்த போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த போராட்டம் காரணமாக, மணிப்பூர் மாநிலத்தில் நேற்று இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. வாகனங்கள் ஓடாததால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கான வாகன போக்குவரத்தும் நேற்று ரத்து செய்யப்பட்டது.
