Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

River turns into Milk - Devotees visit Mandakini River

பதிந்தவர் bsubra மேல் நவம்பர் 13, 2006

ஆற்றில் பால் கலந்ததாக பரபரப்பு: பக்தர்கள் பாட்டிலில் எடுத்து சென்றனர்

லக்கோ, நவ. 12-

உத்தரப்பிரதேசம் மாநிலம் சித்ரகூட் என்ற இடத்தில் மந்தாகினி நதி உள்ளது. இந்த ஆற்றில் ஓடும் தண்ணீரில் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் என மாற்றம் ஏற்பட்டது.

தண்ணீரில் பால் கலந்து ஓடுவது போல் காணப்பட்டது. இதைப் பார்த்த சிலர் ஊருக் குள் சென்று ஆற்றில் பால் ஓடுகிறது என்று தெரிவித்தனர். காட்டுத் தீ போல் ஊர் முழுக்க தகவல் பரவியது.

இதனால் வேடிக்கை பார்க்க மக்கள் திரண்டனர். மந்தாகினி நதிக் கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆற்றுத் தண்ணீர் பால் போன்று வெள்ளை நிறத்தில் ஓடுவதைப் பார்த்து வியந்தனர். சிலர் இது கடவுளின் செயல் என்று பக்திப் பரவசம் அடைந்தனர்.

பக்தர் தகவல்

இந்த ஆற்றில் பால் கலந்தது போல் தண்ணீர் வருவதை முதன் முதலில் பார்த்தவர் ரகுநாத் திவாரி. பக்தரான இவர் காலையில் ஆற்றில் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கினார். அப்போது திடீ ரென்று தண்ணீரின் நடுப் பகுதியில் பால் ஓடுவது போல் வித்தியாசமாக இருந்ததைப் பார்த்தார்.

நேரம் செல்லச் செல்ல தண்ணீர் முழுவதும் `ரிப்பன்’ போல் வெண்மையாக மாறியது. தண்ணீரை குடித்துப் பார்த்த போது வழக்கத்தை விட ருசி மாறி இனிப்பாக இருந்தது. பாலின் சுவை அதில் இருந்ததாக ரகுநாத் திவாரி கூறினார்.

நோய் தீர்க்கும் மருந்து

இந்த தண்ணீரில் நோய் தீர்க்கும் ஆயுர்வேத தன்மை இருப்பதாகவும் தெரிவித்தார். ஆற்றில் வரும் பால் கலந்த தண்ணீரை பிடித்துச் சென்று நோய் வாய்ப்பட்ட தனது மனைவி பிரதிமா புனித நீரா டிய போது அவரது நோய் குண மானதாகவும், கால் வலிதீர்ந்த தாகவும் தெரி வித்தார்.

மத்திய பிரதேச எல்லையில் நயகான் பாலம் அருகே இருந்து தான் ஆற்றுத் தண்ணீரில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி உள்ளூர் பிர முகர்கள் கூறுகையில் 100 வருடத்துக்கு ஒரு முறை இந்த அதிசயம் நிகழும். இதற்கு முன் மந்தாகினி ஆற்றில் இது போல் பால் கலந்து தண்ணீர் ஓடியதாக தனது தாத்தா சொன்னதாகவும் ஊர் பிர முகர் ஒருவர் கூறினார்.

“தற்போது ஆற்றில் பால் கலப்பதாக தகவல் வெளி யானதை அடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து பால் கலந்த ஆற்று தண்ணீரை பாட்டிலில் பிடித்துச் செல்கி றார்கள்.

நிற மாற்றம்

இது பற்றி அறிவியல் வல்லு னர்களிடம் கேட்ட போது, ஆற்றுப் படுகையில் ஏற்படும் புவியியல் மாற்றமே இதற்கு காரணம், பால் போன்ற நிறத் தில் இருப்பதால் அது பால் அல்ல என்றார்.

ஆற்றில் ஏற்பட்டுள்ள நிறம் மாற்றம் குறித்து ஆய்வு நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மந்தாகினி ஆற்றில் கட்டுக் கடங்காத கூட்டம் கூடுவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>