Study: Cluster Bombs Overwhelmingly Kill, Maim Civilians
பதிந்தவர் SnapJudge மேல் நவம்பர் 2, 2006
கொத்துக் குண்டுகளால் அதிகமான பாதிப்பு பொதுமக்களுக்கே
![]() |
|
| அபாயகரமான கொத்துக் குண்டு ஒன்று |
கொத்துக் குண்டுகளால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண பொதுமக்களே , அதில் மூன்றில் ஒரு பங்கினர் சிறார்கள் என்று ஹண்டிகேப் இண்டர்னேஷனல் என்ற பிரச்சாரம் செய்யும் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
24 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்த அமைப்பு, பரந்த ஒரு பகுதியில் குண்டுகளை தூவும் இந்த ஆயுதம் 11,000க்கும் மேற்பட்ட மக்களை கொன்றோ அல்லது ஊனப்படுத்தியோ இருப்பதாக கண்டறிந்திருக்கிறது.
ஆனால், ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் வியட்நாம் போன்ற இடங்களிலிருந்து முழுமையான தகவல்கள் கிடைக்காததால், இந்த புள்ளிவிவரம் உண்மையில் இன்னும் பத்துமடங்காக அதிகரிக்கக்கூடும் என்று அது கூறுகிறது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வெடிக்காத குட்டிக் குண்டுகளை கவனக்குறைவாக நடந்துகொண்டு வெடிக்கச்செய்த சிறுவர்கள் என்று
கூறப்படுகிறது.

