President Iajuddin Ahmed intervenes in crisis in Bangladesh
பதிந்தவர் SnapJudge மேல் அக்டோபர் 30, 2006
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் அந்நாட்டின் அதிபர்
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக அந்நாட்டு அதிபர் இஜாவூதின் அஹமது பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
வங்கதேசத்தின் பிரதான அரசியல் கட்சிகள், வேட்பாளர் ஒருவரை ஏற்க மறுத்தத்தினை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சர்ச்சையினை நீக்கும் முயற்சியாக அதிபர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
வங்கதேசத்தின் தேர்தல் சட்டங்களின்படி, ஜனவரி மாதம் நடைபெறும் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கு, கட்சி சார்பில்லாத ஒருவர் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை ஏற்க வேண்டும்.
முன்னதாக அரசாங்கம் தெரிவித்த வேட்பாளரை எதிர்கட்சிகள் ஏற்காத காரணத்தினால், வேறு ஒரு வேட்பாளரை நிறுத்த நான்கு பிரதான கட்சிகளுக்கும், அதிபர் இன்று வரை கால அவகாசத்தினை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் வங்கதேச அதிபர் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்று இருப்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான அவாமி லீக், தொடர்ந்து போராட்டம் நடத்த போவதாக கூறியுள்ளது.
அரசியல் சர்ச்சையினால் வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி பதினெட்டுப் பேர் பலியாகியுள்ளனர்.
