Exemplary out of state Tamil language students to be rewarded – M Karunanidhi
பதிந்தவர் SnapJudge மேல் அக்டோபர் 26, 2006
வெளிமாநிலங்களில் தமிழில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு: கருணாநிதி அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பிற மாநிலங்களில் தமிழ் மொழி வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாண வர்களை ஊக்குவிக்கும் வகையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும், பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்தவிலும் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படும்.
- முதல் பரிசு ரூ.10 ஆயிரம்,
- 2-ம் பரிசு ரூ.5 ஆயிரம்,
- 3-ம் பரிசு ரூ.3 ஆயிரம்
எனப் பரிசுகள் வழங்கப்படும்.
- புதுடெல்லி,
- மகாராட்டிரம்,
- மேற்கு வங்காளம்,
- கர்நாடகம்,
- ஆந்திரா மற்றும்
- கேரளா ஆகிய 6 மாநிலங்களில் 2,16,000 ரூபாய் செலவில் இத் திட்டம் செயற்படுத்தப்படும் முதல்-அமைச்சர் அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் புது டெல்லி, மேற்கு வங்காளம், கர்நாடகம், ஆந்திரா மற் றும் கேரளா ஆகிய 6 மாநி லங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்ற ஒவ்வொரு மாணவருக்கும், ஒவ்வொரு மாநிலத்திலும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்றும், இத் திட்டம் இனி ஒவ்வொரு ஆண்டிலும் தொடர்ந்து செயல் படுத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
