Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

DMK & Congress(I) negotiations continue for Mayor candidate Election

பதிந்தவர் SnapJudge மேல் அக்டோபர் 23, 2006

மாநகராட்சி மேயர் பதவி: திமுக – காங். போட்டி

சென்னை, அக். 23: தமிழகத்தில் உள்ள 6 மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை ஒதுக்குவது தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய 6 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.

இதில் 4 மேயர் பதவிகள் திமுகவுக்கும் 2 மேயர் பதவிகள் காங்கிரஸýக்கும் என தேர்தலுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவானது. இருப்பினும் எந்த மாநகராட்சி யாருக்கு என்பதை தேர்தலுக்குப் பிறகு தீர்மானிக்கலாம் என்று இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டன.

ஆனால் தற்போது எந்த இரு இடங்களை காங்கிரஸýக்கு ஒதுக்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றின் தலைவர் பதவிகளிலும் யாருக்கு எந்த ஊர் என்பது தேர்தலுக்குப் பின்னர்தான் முடிவு செய்யப்பட்டது. ஆனால் மேயர் பதவியில் மட்டும் யாருக்கு எந்த இடம் என்பதை முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

சென்னையில் திமுக 90 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, சென்னையில் திமுகவைச் சேர்ந்தவரே மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

இதுபோல் மதுரை மாநகராட்சியிலும் திமுவைச் சேர்ந்தவரே மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எஞ்சியுள்ள 4 இடங்களில் 2 காங்கிரஸýக்கு ஒதுக்கவேண்டும். திருச்சி, கோவை மேயர் பதவிகள் காங்கிரஸýக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த இரு இடங்களையும் உள்ளூர் திமுகவினர் கோரி வருகின்றனர்.

இது தொடர்பாக 4 நாள்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

கோவையில் திமுக தனிப் பெரும்பான்மை: எல்லா மாநகராட்சிகளிலும் திமுக வலுவான வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக திருச்சி, கோவை மாநகராட்சிகளிலும் திமுக கவுன்சிலர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் கோவையில் திமுக தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. எனவே உள்ளூர் திமுகவினர் கோவை மேயர் பதவி வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

சேலம், திருநெல்வேலியை காங்கிரஸýக்கு ஒதுக்கலாம் என்றும் திமுகவினர் யோசனை தெரிவிக்கின்றனர். ஆனால் அதை காங்கிரஸ் ஏற்க மறுக்கிறது.

இந்நிலையில் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு கூட்டணித் தலைவர் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே மேயர், நகராட்சித் தலைவர் தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். தனிப்பட்ட முறையில் எத்தனை இடங்கள் கிடைத்துள்ளன என்பதை கணக்கில் கொள்ளாமல் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கும் அனைவரும் பாடுபடவேண்டும் என்று திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>