Vidharbha Farmers Suicides – Plight of Indian Agriculture
பதிந்தவர் SnapJudge மேல் அக்டோபர் 19, 2006
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது
![]() |
|
| வியர்வை சிந்தும் இந்திய விவசாயிகள் |
இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவின் மத்திய மற்றும் தென் மாநிலங்களில் உள்ள பருத்தி விவசாயிகள் பலர் கடந்த பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
பஞ்சம், விவசாயத்துக்கான அரசின் மானியம் குறைக்கப்பட்டது, சந்தை பொருளாதார கொள்கைகள் காரணமாக இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்படும் விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் விவசாயிகளின் பொருளாதாரப் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.
வேளான் இடுபொருட்களை வாங்க பல விவசாயிகள் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் இது விவசாயிகளை கடன் சுமையில் வீழ்த்திவிடுகிறது. சிலர் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியாரை நாடுகின்றனர். இவர்கள் அதிக அளவு வட்டி வசூலித்து விவசாயிகளை பெரும் கடன் சுமையில் ஆழ்த்திவிடுகின்றனர்.


Sivabalan V சொன்னார்
வருந்தக்கூடிய செய்தி. ம்ம்ம்