Election Results – Karunanidhi’s Kavithai
பதிந்தவர் SnapJudge மேல் அக்டோபர் 19, 2006
தேர்தல் வெற்றி: கருணாநிதி கவிதை
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கவிதை வருமாறு:-
எங்குற்றார் எமது நண்பர்
பொங்குற்றுப் புயல் போல வீசுவாரே
பொல்லாத வார்த்தைகளால் ஏசுவாரே – எதிர்
நில்லாமல் போனதெங்கே; இப்போதுப
வெற்றி பெற்ற வீராப்பில்
வெகுண்டெழுந்து கேட்க மாட்டேன்.
அண்ணா கற்றுத் தந்த அரசியல் பண்பாடு;
அணுப் பொழுதும் மறக்க மாட்டேன்-
ஆனால் அவர்கள் மட்டும் இனியேனும்
அட்டியின்றி ஒன்றைக் கற்க வேண்டும்-
அறுபதாண்டுக்கு மேல் பொது வாழ்வு கண்டவனாயிற்Ú
அகவையும் எண்பதைக் கடந்தவனாயிற்றே-
ஏனோதானோ வென்றும்-எடுத்தேன் கவிழ்த்தேன் என்றும்
எதற்காகப் பேசி எழுதி அவன் இதயத்தைக் குடைய வேண்டும்;
என்றொருக் கணம் எண்ணிப் பார்த்திடின்; பகை
வென்றிடக் களம் வந்த பார்த்திபன்-
வேண்டாம் போர் என்று வில் அம்பைக்கீழே
போட்டது போல் இல்லாமல்-பின்னர் அவன்
துரோணராம் குருவினை வணங்கி விட்டுத்
தொடங்கினானே யுத்தத்தை; அந்த மரியாதைப் பண்பாடு
அரசியல் போரிலும் இரு தரப்பிடை இருக்குமானால்;
அமர்க்களத்தில் வெற்றியோ தோல்வியோ;
அவரவர்க்குரிய `புகழ்ப்பூ’ குடையாய் விரிந்து
அகலாத மணம் வீசிக் கொண்டேயிருக்கும்; வரலாற்றில்!
தனக்கு வேண்டும் தக்க மரியாதை எனத்
தலைவன் விரும்புகின்றான் என எண்ணாதீர்; உடன் பிறப்புக்காள்!
தமிழகம் பரம்பரையாய்க் காத்திட்ட பண்பாடும் மரபும்
தவறாது பாதுகாக்கப்பட வேண்டுமே பட்டுப் போகாமல்
என்பதற்கே இந்தப் பாடல்!
