Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Triconamalee Lignite Factory – Moothur or Samboor

பதிந்தவர் SnapJudge மேல் அக்டோபர் 3, 2006

திருகோணமலையில் நிலக்கரி அனல் மின் நிலையம்

நெய்வேலியில் இருக்கும் நிலக்கரி அனல்மின் நிலையம்
இந்தியாவின் ஒத்துழைப்புடன் நிலக்கரி அனல்மின் நிலையம்

இலங்கை திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்குப் பிரதேசத்தின் சம்பூர் பகுதியில் இலங்கையின் இரண்டாவது நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக எரிபொருள் மின்சக்தி அமைச்சு கூறியுள்ளது.

இந்த திட்டம் இந்தியாவின் உதவியுடன் செயற்படுத்தபடுவதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை மின்சக்தி அமைச்சர் ஜான் சேனவிரத்ன அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, இத்திட்டம் தொடர்பாக தாங்கள் பல மாத காலமாக ஆராய்ந்து வருவதாகவும், இது தொடர்பாக இந்தியாவில் இருந்து ஒரு குழு இலங்கை வந்ததாகவும், இலங்கையில் இருந்து ஒரு குழு இந்தியா சென்றதாகவும், அவர்கள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடத்துவதாக கூறினார்.

சமீபத்தில் இந்தப் பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில், சம்பூர்ப் பகுதியில் திட்டம் செயற்படுத்தபடுவது குறித்து அமைச்சரிடம் கேட்கப்பட்ட போது, தற்போது அந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதிகள் இல்லை என்றும், தாங்கள் இது தொடர்பாக கடற்படைத் தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், அதன் போது அங்கு பயங்கரவாதிகள் இல்லை என்று அவர்கள் தெரிவித்ததாகவும், இதனால் இத்திட்டம் அங்கு செயற்படுத்தபடலாம் என கூறினார்.

இது தொடர்பாகவும், நிலக்கரி அனல் மின் நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் தொடர்பான கேள்விகளுக்கும் அமைச்சர் வழங்கிய பதில்களை நேயர்கள் தமிழோசையில் கேட்கலாம்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>