Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Chikunkunya Toll in Kerala increases to 59

பதிந்தவர் SnapJudge மேல் அக்டோபர் 2, 2006

கேரளாவில் சிக்குன் குனியாவுக்கு 59 பேர் சாவு 

திருவனந்தபுரம், அக். 2-

கேரள மாநிலத்தில் சிக்குன் குனியா நோயால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக சேர்த்தலை, அம்பலபுழை ஆகிய தாலுகா பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை சிக்குன் குனியாவுக்கு மாநிலம் முழுவதும் 56 பேர் பலியானார்கள்.

நேற்று மேலும் 3 பேர் இறந்துள்ளனர். இதையும் சேர்ந்து இதுவரை 59 பேர் சிக்குன் குனியாவால் இறந்து விட்டதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீமதி கூறியுள்ளார்.

சிக்குன் குனியா நோயை தடுக்க கேரளாவில் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமானோர் சிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

எனவே அவர்களுக்கு துரிதமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக விடுமுறையில் சென்ற டாக்டர்கள், ஆஸ்பத் திரி ஊழியர்களை உடனடியாக வேலைக்கு திரும்புமாறு அரசு உத்தரவிட்டு உள்ளது.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>