Gay and Lesbians Laws to be revamped
பதிந்தவர் SnapJudge மேல் செப்டம்பர் 26, 2006
ஓரினச்சேர்க்கையை தடை செய்யும் தண்டனைச் சட்டப் பிரிவு நீக்கப்படும்
புதுதில்லி, செப். 27: ஓரினச்சேர்க்கையை தடை செய்யும், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 377-வது பிரிவை நீக்குவதற்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் இரண்டு முறை ஆலோசனை நடந்துள்ளது என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவரும் சுகாதார அமைச்சக கூடுதல் செயலருமான சுஜாதா ராவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இச் சட்டப் பிரிவை நீக்கக் கோரி எழுத்தாளர்கள்
- அருந்ததி ராய்,
- விக்ரம் சேத்,
- திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் உள்ளிட்ட பிரமுகர்கள் மத்திய அரசுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியதை அடுத்து அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இச் சட்டப் பிரிவு மிருகத்தனமானது என்றும், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும் மத்திய அரசுக்கு தனியே எழுதிய கடிதத்தில், நோபல் விருது பெற்ற பொருளாதார மேதை அமார்த்தியா சென் குறிப்பிட்டிருந்தார்.
