Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Indian Elephants to get Neutered

பதிந்தவர் SnapJudge மேல் செப்டம்பர் 17, 2006

யானைகளுக்குக் குடும்பக் கட்டுப்பாடு

பராமரிக்க வசதியில்லாததால் குடும்பக் கட்டுப்பாடு
இந்திய யானைகள்

யானைகளைப் பராமரிக்க போதிய நிதிவசதி இல்லாததால், இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் அவற்றுக்கான பிறப்புக் கட்டுப்பாட்டு- அதாவது குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக கூறியிருக்கிறது.

மேற்குவங்க வனத்தில் சுமார் 400 யானைகள் இருக்கின்றன.

இவற்றில் சுமார் 70 யானைகள், தனியாராலோ அல்லது அரசாங்க வனத்துறையினாலோ பராமரிக்கப்படுகின்றன.

பல வன விலங்கு சரணாலயங்களில் ரோந்து நடவடிக்கையை மேற்கொள்ள வனத்துறைக் காவலர்கள் இந்த யானைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

தம்மால் பராமரிக்கப்படும் யானைகளை பராமரிக்க மேற்குவங்க வனத்துறை வருடாந்தம் 6 கோடி இந்திய ரூபாய்களை செலவிடுகிறது.

ஆனால் தமது வனத்துறை, நிதி ஒதுக்கீட்டு குறைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே பயன்மிக்க யானைகளை மாத்திரம் பராமரிக்குமாறும், அத்துடன் யானைகளுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார், வன அதிகாரியான பி.ரி. புத்தியா.

வனத்துறைப் பணியில் இருக்கும் யானைகள் மத்தியில் வருடாந்தம் மூன்று அல்லது நான்கு குட்டியானைகள் ஈன்றெடுக்கப்படுவது வழக்கம் என்று கூறும் புத்தியா, அத்துடன் இவற்றில் 30 யானைகள் மாத்திரமே வனத்துறை சரணாலயங்களை பாதுகாக்க பயன்படுத்தப்படுவதாகவும் கூறுகிறார்.

பயன்தரும் யானைகளை மாத்திரம் வளர்க்க உத்தரவு
பயன்தரும் யானைகளை மாத்திரம் வளர்க்க உத்தரவு

வனத்துறைப் பணியில் இருக்கும் சுமார் ஒரு டசின் பெண் யானைகளுக்கு மருத்துவர்கள் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் ஊசிகளைப் போடுவார்கள் என்று அவர் கூறுகிறார்.

ஆனால், யானைகளுக்கு இனப்பெருக்கக் கட்டுப்பாடு செய்வதற்கான இந்த பிரேரணைத் திட்டம் குறித்து வனத்துறை பாதுகாப்பு அமைப்புகள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளன.

இதனை ஒரு கொலை நடவடிக்கையாகக் பார்க்கும் ‘ஈரநிலம் மற்றும் காட்டு விலங்குகளின் நண்பர்கள்’ என்னும் சுற்றுச்சூழல் குழுவின் இணைப்பாளரான, முகுதா முகர்ஜி அவர்கள், யானைகளைப் பராமரிக்க முடியாவிட்டால், அரசாங்கம் அவற்றுக்கு அநுசரணையாளர்களைத் தேட வேண்டுமே ஒழிய, அவற்றின் இனத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கூறுகிறார்.

தம்வசம் உள்ள இளம் யானைகளை, வனத்துறையினர் காடுகளில் விடுவிக்க வேண்டும் அல்லது அவை இனப்பெருக்கம் செய்வதைத் தடுப்பதற்குப் பதிலாக அவற்றை பராமரிக்க நிதி மூலத்தைத் தேட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>