Five Maoists Dead in Andhra Pradesh
பதிந்தவர் SnapJudge மேல் செப்டம்பர் 15, 2006
ஆந்திராவில் 5 மாவோயிஸ்டுகள் பலி
![]() |
|
| ஆந்திர மாவோயிஸ்டுகள் |
இந்தியாவின் ஆந்திரபிரதேச மாநிலத்தில் வாரங்கல் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய திடீர் வேட்டை ஒன்றில் மாவோயிச கிளர்ச்சியாளர்கள் ஐவர் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள்.
கொல்லப்பட்ட ஐவருமே தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிச உறுப்பினர்கள் என்றும், ஒருவர் மூத்த தலைவர் என்றும், மூவர் பெண்கள் என்றும் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
கடந்த சில வாரங்களில் மூத்த மாவோயிச தலைவர்கள் பலர் காவல்துறையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

