Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Chengalippan – Anjali

பதிந்தவர் SnapJudge மேல் செப்டம்பர் 14, 2006

தலைவர்கள் இரங்கல்

சென்னை, செப். 15: சுதந்திரப் போராட்ட தியாகியும் தொழிற்சங்கத் தலைவருமான செங்காளிப்பன் மறைவுக்கு மத்திய அமைச்சர் வாசன், ஐஎன்டியுசி பொதுச் செயலாளர் காளன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வாசன்: கோவை காமராஜர் என்று அன்போடு அழைக்கப்பட்ட வரும், காமராஜர், மூப்பனார் ஆகியோரோடு நெருங்கிப் பழகியவருமான செங்காளிப்பனின் மறைந்த செய்தி அறிந்து துயரமுற்றேன். சிறந்த தொழிற்சங்கவாதியான செங்காளிப்பன் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.

காளன்: கோவை மாவட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு தலை சிறந்த தொழிற்சங்கத் தலைவராக 60 ஆண்டுகளுக்கு மேலாக செயலாற்றி பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு அடிப்படையான உரிமைகளைப் பெற்றுத் தந்து, பல்வேறு ஊதிய உயர்வு ஒப்பந்தங்களையும் பல்வேறு சலுகைகளையும் பெற்று தந்தவர்.

“வெள்ளையனே வெளியேறு’ என்னும் இறுதிக் கட்ட சுதந்திரப் போராட்டத்தில் 7 ஆண்டுகள் கடும் சிறை தண்டனை அனுபவித்தவர்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>