Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Ceasefire in Mid-East; UN Agreement on Israel

பதிந்தவர் SnapJudge மேல் ஆகஸ்ட் 15, 2006

இஸ்ரேலிய சிப்பாய்கள்
இஸ்ரேலிய சிப்பாய்கள்

போர் நிறுத்தம் வந்தாலும் ஹெஸ்பொல்லாக்களை தேடுவோம் என்கிறார் எகுட் ஒல்மர்ட்

லெபனானில் கிட்டதட்ட ஐந்து வாரங்களாக நடைபெற்ற மோதல்களை போர் நிறுத்தம் முடிவிற்கு கொண்டு வந்து இருந்தாலும், லெபனானில் இருக்கும் ஹெஸ்பொல்லா கொரில்லா அமைப்பின் தலைவர்களை தாம் தேடிப்பிடிப்போம் என்று இஸ்ரேலிய பிரதமர் எகுட் ஒல்மர்ட் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஹெஸ்பொல்லாவிற்கு எதிராக போரிடுவது என்ற முடிவானது, தன்னை பாதுகாக்க இஸ்ரேல் கொண்டு இருக்கும் உறுதிப்பாட்டினை காண்பிக்கிறது என தெரிவித்தார்.

இது போர் என்றும் இஸ்ரேல் தனது பொறுப்புகளில் இருந்து விலகி செல்லாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த சண்டை ஆரம்பிப்பதற்கு காரணமான, ஹெஸ்பொல்லாவினால் கடத்தி செல்லப்பட்ட தனது இரண்டு வீரர்களை விடுவிக்க தாங்கள் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் எகுட் ஒல்மர்ட் கூறினார்.

போர் நடந்த முறை குறித்து விசாரணை நடத்த போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் பேரட்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லா ஆயுதகுழுவினர் மீண்டும் ஒன்றிணைய இஸ்ரேல் இராணுவம் அனுமதிக்க கூடாது என்றும் அவர் கூறினார்.


தெற்கு லெபனானை நோக்கி மக்கள் படையெடுப்பு

வீடுதிரும்பும் அகதிகள்
வீடுதிரும்பும் அகதிகள்

இஸ்ரேலிய படைகளுக்கும், ஹெஸ்பொல்லாவிற்கும் இடையில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதை அடுத்து, முன்னர் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், தெற்கு லெபனானை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.

தங்களது வீடுகளையும் சொத்துகளையும், பார்ப்பதற்காக புறப்பட்டுள்ள மக்களின் கார்களால் பெய்ரூட் மற்றும் சிடானில் இருக்கும் சாலைகள் நிரம்பி காணப்படுகின்றன.

சண்டையின் போது கடுமையான மோதல் இடம்பெற்ற பின்ட் சிபாயில் என்ற கிராமத்திற்கு சென்ற பிபிசி செய்தியாளர் ஒருவர், அங்கு அழிவு தவிர வேறு எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் திரும்பி வந்து கொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் தமது கார்களின் கூரைகளில் மூட்டை முடிச்சுகள் காணப்படுகின்றன.

சண்டை நிறுத்தம் ஏற்பட்ட பல மணி நேரத்திற்கு பின்னர், இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில், இரண்டு ஹெஸ்பொல்லாவினரை இஸ்ரேலிய வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.


இஸ்ரேல் மீது காசாவில் இருந்து தாக்குதல்

காசாவில் இஸ்ரேல் பதில் தாக்குதல்
காசாவில் இஸ்ரேல் பதில் தாக்குதல்

லெபனானில் சண்டை நிறுத்தம் ஏற்பட்ட நேரம், காசாவில் இருக்கின்ற தீவிரவாதிகள் இஸ்ரேலிய நகரமான அஷ்கெலான் மீது ராக்கெட்டுளை ஏவி இருக்கின்றனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஷெல் தாக்குதல் நடத்தியதில், மூன்று பாலஸ்தீன பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ராக்கெட்டுகளை ஏவிய தீவிரவாதிகள் தப்பி விட்டதாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக, காசாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதினை தடுத்து நிறுத்த இஸ்ரேல் முயற்சித்து வருகின்றது.

அத்தோடு காசா எல்லைக்கு அருகாமையில் பிடித்து செல்லப்பட்ட தனது இராணுவ வீரர் ஒருவரையும் விடுவிக்க முயற்சித்து வருகின்றது.

சண்டை நிறுத்தம் ஒன்றினை முன் வைத்துள்ள பாலஸ்தீன தரப்பு, இஸ்ரேல் சிறைச்சாலைகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை சிலரை விடுவித்தால், இராணுவ வீரரை விடுவிப்பதாக கூறியுள்ளது. ஆனால் இதனை இஸ்ரேல் நிராகரித்து விட்டது.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>