Njaanapeeda Award to Marathi Poet
பதிந்தவர் SnapJudge மேல் ஆகஸ்ட் 10, 2006
மராத்தி கவிஞருக்கு ஞானபீட விருது: கலாம் வழங்கினார்
புதுதில்லி, ஆக. 11: மராத்தி கவிஞர் “விண்டா’ கரந்திகருக்கு 2003-ம் ஆண்டுக்கான ஞானபீட விருதை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வியாழக்கிழமை வழங்கி சிறப்பித்தார்.
தில்லியில் நடைபெற்ற விழாவில் விருது மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கமும் அவருக்கு வழங்கப்பட்டது.
88-வயதாகும் கரந்திகர், மராத்தி இலக்கியத்தில் மிகச் சிறந்த பங்களிப்பை செய்தவர். பொதுமக்களும் எளிதில் படித்து புரிந்து கொள்ளும் வண்ணம் கவிதை இயற்றுவதில் தனித்துவம் பெற்றவர்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் 3-வது நபராக இவ்விருதை பெற்றுள்ளார் கரந்திகர்.
