Gujarat Bans selling Coke/Pepsi in Schools & Colleges
பதிந்தவர் SnapJudge மேல் ஆகஸ்ட் 7, 2006
குஜராத்தில் அரசு பள்ளி, கல்லூரிகளில் கோக், பெப்ஸிக்கு தடை
ஆமதாபாத், ஆக. 7: அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு ரசாயன நச்சு கலந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து கோக், பெப்ஸி உள்ளிட்ட குளிர் பானங்களுக்கு அரசாங்க பள்ளி, கல்லூரிகளில் தடைவிதித்துள்ளது குஜராத் அரசு.
மாநிலத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 400 அரசுக் கல்லூரிகளிலும் திங்கள்கிழமை முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்று மாநில கல்வி அமைச்சர் ஆனந்தீபன் படேல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மேலும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளைப் பொறுத்தவரை அவர்களே இவ்விஷயத்தில் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றார்.
குஜராத் பல்கலைக்கழகம் அதன் கட்டுப்பாட்டில் உள்ள 260 கல்லூரிகளின் உணவகங்களில் கோக், பெப்ஸி உள்ளிட்ட குளிர்பானங்களுக்கு சனிக்கிழமை தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
