Arasu Bathilgal – Tamil Poem
பதிந்தவர் SnapJudge மேல் ஆகஸ்ட் 4, 2006
முகவை முத்துசாமி,
தொண்டி.
ஒரு இனிய கவிதை ப்ளீஸ்?
தமிழிலக்கியத்தில் கவிதைக்கு நீண்ட சரித்திரமும், பெருமைக்குரிய இடமும் உள்ளதைப் போலவே சீனாவின் இலக்கிய பாரம்பரியத்திலும் கவிதைக்கு வளமான ஓர் இடம் உண்டு. நம் கவிஞர்களைப் போலவே சீனத்துக் கவிஞர்களும் வறுமையில் வாடியிருக்கிறார்கள். ஏழ்மையில் இறந்தும் போயிருக்கிறார்கள். ஆனாலும் வாழ்வின் அற்புதக் கணங்களையும், அனுபவங்களையும் எளிய மொழிநடையில் பதிவு செய்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். கல்பனாவின் மொழிபெயர்ப்பில், ரிஷபம் பதிப்பகம் வெளியீடான சீனத்துக் கவிதைகள் என்கிற புத்தகத்திலிருந்து சாம்பிளுக்கு கவிஞர் ஃபாங் பிங்கின், இலையுதிர் காலம் என்கிற கவிதை :
உதிர்ந்த இலைகள்
அமைதியாக உரசிச் செல்கின்றன
என் சன்னலில்
காலம் காலமாய்.
கதவு சிரமப்பட்டு
திறப்பது போல் தோன்றுகிறது
காற்றின் குறும்பிற்கு.
ஆனால் பக்கத்து வீட்டுக்காரரின்
மூன்று வயது மகள்
உள்ளே நுழைந்தாள்.
தன்னிரு கைகளிலும் ஏந்தியிருந்த
ஒளி நிறைந்த செந்நிற
ஆப்பிளைத்
தந்தாள் பரிசாக.

christopher சொன்னார்
please sent it the poem