‘I am Sorry’ PM to Pakistan Human Rights Activist Asma Jehangir
பதிந்தவர் SnapJudge மேல் ஆகஸ்ட் 3, 2006
பாக். மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீரிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர்
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீர் தில்லியில் தங்கியுள்ள ஹோட்டல் அறையை போலீஸôர் சோதனை செய்தது தொடர்பாக அவரிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர் மன்மோகன் சிங். மன்மோகன் சிங்குக்கு தனிப்பட்ட முறையில் நன்கு அறிமுகமானவர் அஸ்மா ஜஹாங்கீர். அவருக்கு ஏற்பட்ட அசெüகரியத்துக்கு மன்னிப்பு கோருவதாக மன்மோகன் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
பிரதமரின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் பாரு இத் தகவலைத் தெரிவித்தார். தில்லியில் நடைபெறும் மனித உரிமைக் கருத்தரங்கில் கலந்துகொள்ள பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழு உறுப்பினராக அஸ்மா ஜஹாங்கீர் இந்தியா வந்துள்ளார். இதனிடையே, அஸ்மா ஜஹாங்கீர் தங்கியுள்ள ஹோட்டல் அறையை சோதனை செய்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு தில்லி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
